murder

ஹைதராபாத் நகரின் ஹயத்நகரை சேர்ந்தவர் சீனிவாஸ். இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரின் மனைவி ரஞ்சிதா. இந்த தம்பதியின் மகள் கீர்த்தி கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சீனிவாஸ் லாரிக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பினார். அப்போது ரஞ்சிதா வீட்டில் இல்லை. அவர் எங்கே எனக்கேட்ட போது தான் விஷாகப்பட்டினத்தில் இருந்ததாகவும் தனக்கு தெரியாது எனவும் கீர்த்தி கூறியுள்ளார். எனவே, இருவரும் காவல் நிலையம் செய்து ரஞ்சிதாவை காணவில்லை என புகார் அளித்தனர்.

போலீசாரிடம் தனது தந்தை மது அருந்திவிட்டு அடிக்கடி அம்மாவை அடிப்பதாகவும், அவர் மீது சந்தேகமாக இருப்பதாகவும் கீர்த்தி கூறியுள்ளார். எனவே, போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் ரமணாப்பேட் அருகே உள்ள ரயில் தண்டாவளத்தில் அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அது ரஞ்சிதா என போலீசார் கண்டுபிடித்தனர். மேலும், கீர்த்தி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவருடன் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

dead body

கீர்த்தி சஷி என்கிற வாலிபரை காதலித்து வந்துள்ளார். இது ரஞ்சிதாவிற்கு தெரிந்து கண்டித்துள்ளார். ஆனால், கீர்த்தி கேட்கவில்லை. மேலும், சம்பவத்தன்று இருவருக்கும் சண்டை நடந்துள்ளது. எனவே, தனது தாயை கொலை செய்ய முடிவெடுத்த கீர்த்தி இரவு ரஞ்சிதா தூங்கிய பின் தனது காதலனை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். ரஞ்சிதாவின் கை கால்களை காதலன் அழுத்தி பிடித்துக் கொள்ள கீர்த்தி கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். அதன்பின், பிணத்தை வீட்டிலேயே மறைத்து வைத்திருந்துள்ளார். ஆனால், உடலிலிருந்து துர்நாற்றம் வீச காதலனுடன் சேர்ந்து உடலை எடுத்து சென்று தண்டவாளத்தில் தூக்கி வீசியுள்ளார்.

இதைத் தொடர்ந்து போலீசார் அவரையும், அவரின் காதலரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.