Geethanjali Selvaraghavan Love Story

செல்வராகவன் மீது காதல் வயப்பட அந்த கதைதான் காரணம் என்ன கூறியுள்ளார் கீதாஞ்சலி.

Geethanjali Selvaraghavan Love Story : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். தனுஷ் நடிப்பில் வெளியான காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் சோனியா அகர்வால் நாயகியாக நடித்து இருப்பார். இப்படத்தின் மூலமாக செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு சில வருடங்களிலேயே விவாகரத்தும் செய்தார். அதன் பின்னர் செல்வராகவன் கீதாஞ்சலி என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

சமீபத்தில்தான் கீதாஞ்சலிக்கு மூன்றாவது குழந்தை பிறந்திருந்தது. இந்த நிலையில் அவர் செல்வராகவன் மீது காதல் வயப்பட என்ன காரணம் என்பதை கூறியுள்ளார். செல்வராகவன் எழுதிய கானல் நீர் என்ற கதையை படித்து தான் அவர் மீது காதல் கொண்டேன். இந்த கானல் நீர் கதைதான் ஆர்யா மற்றும் அனுஷ்கா நடிப்பில் வெளியான இரண்டாம் உலகம் திரைப்படம் என பேசியுள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் இறுதியாக நெஞ்சம் மறப்பதில்லை என்ற திரைப்படம் வெளியாகி வசூல் வேட்டை ஆடியது. இதனை அடுத்து தனுஷ் நடிப்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் நானே வருவேன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.