விஜய் சேதுபதி பேச்சுக்கு எதிராக காயத்ரி ரகுராம் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
Gayathri Raguram Comment On Vijay Sethupathi Speech : தளபதி விஜய், விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது, இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி கொரானா குறித்து யாரும் பயப்பட வேண்டாம். கொரானாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு நன்றி என கூறினார்.
மேலும் மனிதனை மனிதனாக பாருங்கள். மனிதனை ஒரு மனிதன் காப்பாற்ற வேண்டும். கடவுள் மேலே இருக்கிறார். பூமியில் மனிதர்கள் தான் இருக்கிறார்கள்.
நான் கடவுளை காப்பாற்றுகிறேன் என கூறும் கும்பலிடம் இருந்து சற்று தள்ளியே இருங்கள். கடவுளுக்கு அவரை காப்பாற்றி கொள்ள தெரியும் என கூறி இருந்தார்.
இது குறித்து காயத்ரி ரகுராம் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார், அந்த பதிவில் மனிதரை நம்புங்கள் என சொன்னது சரி. ஆனால் ஒரு மனிதனை மணிதன் தான் காப்பாற்ற வேண்டும் என கூறியதை ஏற்று கொள்ள முடியாது.
மனிதனை உயர்த்துவதும் அவனுக்கு கை கொடுத்து தூக்கி விடுவதும் கடவுள் தான் என பதிவிட்டுள்ளார்.
Good luck with believing another human nanba. No beliefs can destroyed. There are crores of believers (all religion) and if you think we all are dumb, I feel sorry you for believing another human who can lie and hate instantly. Life is designed by god only pic.twitter.com/IBOPuXkujp
— Gayathri Raguramm (@gayathriraguram) March 16, 2020