Gaja & MK Stalin : கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக அறக்கட்டளை சார்பில் நிவாரண நிதியாக, ரு. 1 கோடி ரூபாய் அளிக்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கஜா புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும் அளவில் சேதங்கள் ஏற்பட்டன. இந்த புயலால், லட்சக்கணக்கான மரங்கள், வீடுகள், மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன.
அதிலும், டெல்டா பகுதியில் உள்ள மக்கள் பெரும் அவதிக்குள்ளா கியுள்ளனர், இருக்க இருப்பிடம், உண்ண உணவின்றி தவித்து வருகின்றனர். மேலும் நூற்றுக்கணக்கான கால்நடைகள் இந்த புயலில் உயிரிழந்துள்ளன.
இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை சீரமைக்கும் பணிக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும் திமுக எம்.எல். எக்கள் மற்றும் எம். பிக்கள் ஒரு மாத சம்பளம் நிதியாக வழங்கப்படும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.