murder

மனைவியுடன் உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த 2 மாத பிஞ்சு குழந்தையை மகளென்றும் பாராமல் தந்தையே அடித்து கொலை செய்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கே.கே.நகர் அம்பேத்கர் காலணியில் வசித்து வருபவர் துர்கா. இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கும் நிலையில் கணவரை பிரிந்த அவர், 2 ஆண்டுகளுக்கு முன்பு எல்லப்பன் (27) என்பவரை 2வது திருமனம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 மாதத்திற்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்தது. தம்பதி இருவரும் ஒப்பந்த துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வந்தனர்.

எல்லப்பனுக்கு குடிப்பழக்கம் உண்டு. எனவே, தினமும் குடித்துவிட்டு வந்து மதுபோதையில் மனைவியுடன் உடலுறவை வைத்துக்கொள்வதை அவர் வழக்கமாக கொண்டிருந்தார். ஆனால், குழந்தை பிறந்தவுடன் இரவு நேரங்களில் குழந்தை அழுது கொண்டே இருப்பதால் துர்காவிற்கு குழந்தையை கவனிக்கவே நேரம் சரியாக இருந்தது. இதில், எல்லப்பன் ஆத்திரத்தில் இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்த எல்லப்பன் 2 முறை மனைவியை உடலுறவுக்கு அழைத்துள்ளார். ஆனால், குழந்தை அழுது கொண்டே இருந்ததால் துர்கா குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்தார்.

இதில் ஆத்திரமடைந்த எல்லப்பன் குழந்தையை பலமாக தாக்கியுள்ளார். துர்காவையும் அடித்து உதைத்துவிட்டு தூங்க சென்றுவிட்டார். காலையில், மூக்கில் ரத்தம் வழிந்த படி குழந்தை இறந்து கிடந்தது. எனவே, இது தொடர்பாக துர்கா காவல் நிலையத்டில் புகார் அளித்தார். இதனையடுத்து, எல்லப்பனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.