மாநாடு படத்தில் நடிக்க வேண்டாம் என அரவிந் சாமிக்கு ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அரவிந் சாமி. இவர் தற்போது தலைவி படத்தில் எம்.ஜி.ஆராக நடித்து வருகிறார்.
இவர் அச்சு அசலாக எம்.ஜி.ஆராகவே மாறி இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி இருந்தன. மேலும் இவர் மாநாடு படத்தில் சிம்புவுக்கு வில்லனாக நடிக்க இருப்பதாகவும் இதற்கான அறிவிப்பு இன்னும் இரண்டு நாளில் வெளியாகும் எனவும் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் எம்.ஜி.ஆர் ரசிகர்களும் தொண்டர்களும் இப்படி புனிதமான வேடத்தில் நடித்து விட்டு வெறுத்தக்க வில்லன் வேடத்தில் நடிக்க வேண்டாம் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ரசிகர்களின் கோரிக்கையை அரவிந்த் சாமி ஏற்பாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.