உனக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா என வெளியாகியுள்ள ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் சம்யுக்தாவை கலாய்த்து வருகின்றனர்.
Fans Blast Samyuktha : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் 3 சீசன் முடிவடைந்து தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
இன்று முப்பத்தி இரண்டாவது நாள் ஒளிபரப்பாக உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
முதல் ப்ரோமோ வீடியோவில் சிறந்த போட்டியாளராக பெரும்பாலான போட்டியாளர்கள் நடிகர் ஆரியை தேர்வு செய்தனர்.
இதனால் மனமுடைந்து போன சம்யுக்தா ஆஜித்திடம் கண்ணீர் விட்டு அழுதார். எப்படி எல்லாரும் மனசாட்சியே இல்லாம நடந்துக்கிறாங்க. ஆரி அப்படி என்ன நல்லது பண்ணினார்? என கண் கலங்கி உள்ளார்.
இதனால் நெட்டிசன்கள் உனக்கு வந்தா ரத்தம் மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?? என சம்யுக்தாவை கிண்டலடித்து வருகின்றனர்.