உயிருடன் பாம்பை கையில் பிடிக்க விவகாரத்தில் நடிகர் சிம்பு மீது வழக்குப் பதிவு செய்துள்ளது வனத்துறை.
Eswaran Shooting Spot Video Controversy : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வரும் திரைப்படம் ஈஸ்வரன்.
இயக்குனர் சுசீந்திரன் இயக்கி வரும் இப்படத்திற்காக நடிகர் சிம்பு தன்னுடைய உடல் எடையை மொத்தமாக குறைத்து செம ஸ்லிம்மாக மாறியுள்ளார்.
இப்படத்திற்காக சிம்பு சூட்டிங் ஸ்பாட்டில் உயிருடன் இருக்கும் நல்ல பாம்பை கையில் பிடிப்பது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆனது.
பொதுவாக சூட்டிங் ஸ்பாட்டில் பயன்படுத்தப்படும் பாம்புகளின் பல் பிடுங்கப்பட்டு இருக்கும், அல்லது வாய் ஒட்டப்பட்டு இருக்கும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது வனவிலங்குகளை கொடுமைப்படுத்தும் குற்றமாகும்.
இதனால் நடிகர் சிம்பு மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு வேளச்சேரி வனத்துறையினரிடம் சமூக ஆர்வலர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.