சீரியல் நடிகர் ஈஸ்வர் ஜெயஸ்ரீ-க்கு கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் தேவதையை கண்டேன் என்ற சீரியலில் நடித்து வருபவர் ஈஸ்வர். இவர் சீரியல் நடிகை ஜெயஸ்ரீயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஜெயஸ்ரீ-க்கு இது இரண்டாவது திருமணம். ஏற்கனவே அவருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் ஜெயஸ்ரீ ஈஸ்வருக்கும் அதே சீரியலில் நடித்து வரும் மஹாலக்ஷ்மிக்கும் இடையே தொடர்பு இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் தன்னுடைய குழந்தையுடன் சேர்ந்து பேட்டி கொடுத்தார்.
தன்னுடைய குழந்தையின் மீது தவறான நோக்கத்தில் கை வைத்ததாகவும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இது குறித்து ஈஸ்வர் அளித்த பேட்டியில் ஜெயஸ்ரீ பற்றி பல உண்மைகளை கூறியுள்ளார். மேலும் அவருடன் சேர்ந்து வாழ முடியாது எனவும் கூறியுள்ளார்.
மேலும் ஜெயஸ்ரீக்கு இனி குழந்தையை வைத்து கொண்டு பேட்டிகளை கொடுக்காதே எனவும் அது குழந்தையை தான் பாதிக்கும் எனவும் கூறியுள்ளார்.