முதல்வர் கொடுத்த வாக்குறுதி

உயிர் மூச்சு உள்ளவரை உங்களுக்காக நான் என்ற வாசகத்தோடு தீபாவளித் திருநாள் வாழ்த்து தெரிவித்ததோடு உறுதிமொழி ஒன்றையும் எடுத்துக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

முதல்வர் கொடுத்த வாக்குறுதி : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையிலான அதிமுக அரசு சிறப்பாக செயலாற்றி வருகிறது. உலகமே மிரண்டு போயிருக்கும் இந்த கொரோனா வைரஸ் பேரிடர் காலத்தில் தமிழகம் சாதுர்யமாக செயல்பட்டு மக்களின் நலனை பாதுகாத்து வருகிறது.

எங்குமே இல்லாத அளவில் மிக விரைவாக தமிழகத்தில் கரானா வைரஸ் தொடர்ந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் இன்று தீபாவளி திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந் நன்னாளில் தமிழக மக்கள் அனைவருக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து உறுதி மொழி ஒன்றை எடுத்து கொள்வதாக அறிக்கை வெளியிட்டுள்ளார் தமிழக முதல்வர்.

அந்த அறிக்கையில் இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள் என்ற தலைப்போடு தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி உள்ளார்.

அதாவது என்னடா இது முதலமைச்சர் இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள் என தொடங்குகிறார் என குழம்ப வேண்டாம்.

இந்த தீபாவளி திருநாள் அனைவரின் உழைப்பிற்கு கிடைத்த மகசூல். கோவிட் தடுப்பு நடவடிக்கைகள், கொரானா காலத்திலும் தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள் என பலவற்றில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் நீர் மேலாண்மையில் இந்திய அளவில் ஜல்சக்தி நிறுவனத்தின் தேசிய விருதினை தமிழகம் பெற்றுள்ளது. இந்திய அளவில் சிறப்பான ஆட்சி வழங்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2வது இடம் பிடித்துள்ளது.

அரசும் அரசு அதிகாரிகளும் அதைத் தாண்டி வரும் அயராது உழைத்து இந்த மகத்தான சாதனையைப் படைக்க உறுதுணையாக இருந்துள்ளனர். இதில் மக்களாகிய உங்களின் பங்கு மிகவும் முக்கியமானது.

பல விமர்சன பேரிடர்களையும் இயற்கைப் பேரிடர்களையும் அம்மாவின் வழியில் நடந்து வரும் இதன் நல்லாட்சி மேலும் ஒரு ஆண்டை நிறைவு செய்துள்ளது.

இத்தருணத்தில் நமது உழைப்பிற்கு அகில இந்திய அளவில் தமிழகத்திற்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம் நமக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக இன்னும் நாம் பாடுபட வேண்டியது நிறைய உள்ளது.

இது மக்கள் அண்ணே உங்களுக்கு நான் கொடுத்த கடமையை நினைவூட்டுகிறது. ஒரு காலத்தில் தமிழகத்தை அனைத்து துறைகளிலும் முதல் மாநிலமாக மாற்ற வேண்டும்.

அதற்காக எனது முழு மனதுடனும் முழு உத்வேகத்துடன் பணியாற்றுவேன் என உறுதியளிக்கிறேன். நம் உழைப்பின் வெற்றியால் அடுத்த தீபாவளி இன்னும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் இருக்கும் என நம்புகிறேன்.

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். உயிர் மூச்சு உள்ளவரை உங்களுக்காக நான் என்ற வாசகத்தோடு அந்த அறிக்கையை நிறைவு செய்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.