EPS Meet With Tiruchy

திருச்சியில் வாழை விவசாயிகளை நேரில் சந்தித்து பேசி அவர்களின் குறைகளை கேட்டறிந்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்.

EPS Meet With Tiruchy : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டாவது நாளாக திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் தனது பிரச்சரத்தை தொடங்கினார். அப்போது, பெருங்குடி பகுதியில் உள்ள வாழைத் தோட்டத்தில் விவசாயம் மேற்கொண்டு வந்த விவசாயிகளை சந்திது பேசினார்.

அப்போது, தமிழக அரசு கல்வியை இலவசமாக அளித்து வருவதாகவும், தற்போது மருத்துவ மேற்படிப்பும் ஏழை மாணவர்கள் படிக்கும் வகையில் உள் ஒதுக்கீடு செய்து கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆகேவே, விவசாய மக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பினால் மட்டும் போதும் என்றும் முதலமைச்சர் வாழை விவசாயிகளை கேட்டுக் கொண்டார்.

விவசாயிகள் கோரிக்கை :
டெல்டா பகுதியில் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை திருச்சி மேற்கு பகுதியில் உள்ள விவசாயிகளுக்கும் கொடுக்க வேண்டும்.

வாழை மரம் என்பது ஒரு வருட வெள்ளாமை – எனவே லாலாபேட்டை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளுக்கு சில சலுகைகள் உள்ளது.

முதலமைச்சர் பேச்சு :


வாழைப்பட்டையில் இருந்து துணி தயாரிக்கலாம் என்று மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். மயில்சாமி அண்ணாதுரையின் தலைமையில் தொழிற்சாலை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

முநிறி – குளித்தலை இடையே தடுப்பு அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.