கண்ணுக்குத் தெரியாத காத்துல கூட ஊடுருவிச் செல்லும் ஒரே கட்சி திமுக என பிரச்சார கூட்டம் ஒன்றில் செம மாஸாக பேசியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
EPS Latest Speech in Campaign : தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இரண்டு முறை ஆட்சியை நழுவவிட்ட திமுக இம்முறையாவது ஆட்சியை பிடிக்க வேண்டுமென தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
ஆனால் அனைத்து துறைகளிலும் இதுவரை இல்லாத அளவில் புரட்சியை செய்துள்ள அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் முதல்வர் பழனிசாமி அவர்கள் பிரச்சார கூட்டத்தில் பேசிய போது இந்தக் கொடி எப்படி பறக்கிறது?? சொல்லுங்க காற்றில் தானே பறக்கிறது. இந்த கண்ணுக்குத் தெரியாத காற்றில் கூட ஊழல் செய்யும் ஒரே கட்சி திமுக தான் என பேசுகிறார். முதல்வர் பழனிசாமி பேசிய இந்த பேச்சு சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.