EPS in Kanchipuram Meeting Highlights

திடீரென 5 நிமிடம் பிரச்சாரத்தை நிறுத்தியுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அதற்கான காரணம் பலரையும் நெகிழ வைத்து வருகிறது.

EPS in Kanchipuram Meeting Highlights : தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாத முதல் வாரத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் காஞ்சிபுரத்தில் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த பிரச்சாரத்தின் போது இவர் திடீரென ஐந்து நிமிடம் தன்னுடைய பிரச்சாரத்தை நிறுத்தினார்.

அதாவது அந்தப் பகுதியில் உள்ள மசூதியில் தொழுகை நடைபெற்றது. இதனால் அந்த நேரம் தன்னுடைய பிரச்சாரத்தை நிறுத்தி உள்ளார்.

தொழுகை முடிந்ததும் மீண்டும் தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கினார். முதல்வரின் இந்த செயல்பாடு மக்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.