EPS About Jallikattu Protest

அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகளால் தமிழக மக்களை மகிழ்ச்சிக் உள்ளாக்கி வருகிறார் முதல்வர் பழனிசாமி.

EPS About Jallikattu Protest : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தொடர்ந்து அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது சட்டசபையில் ஜல்லிக்கட்டு போராட்டங்களின் போது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என தெரிவித்துள்ளார்.

சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வழக்குகளை வாபஸ் பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

காவலர்களை தாக்கியது வாகனங்களை தீயிட்டு கொளுத்தியது உள்ளிட்ட ஒரு சில குற்ற வழக்குகளை தவிர மற்றவர்கள் மீது போட்டப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.