ஈஸ்வரன் படம் பற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில் தற்போது அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Eeshwaran Movie Controversy Details : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக ஈஸ்வரன் மற்றும் மாநாடு என இரண்டு திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
மாநாடு திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வர ஈஸ்வரன் இப்படத்தை இயக்குனர் சுசீந்திரன் இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கையில் பாம்பு உடன் சிம்பு இந்த போஸ்டரில் இடம் பெற்றிருந்தார்.
அதுமட்டுமல்லாமல் இந்த படத்தின் டீஸர் வெளியாகி இன்னும் எதிர்பார்ப்பை கூட்டியது. கையில் பாம்புடன் இருந்ததால் சிம்பு பாம்பை கொடுமைப்படுத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
ஆனால் அது ரப்பர் பாம்பு என படக்குழு கூறியும் இந்த சர்ச்சை ஓய்ந்த பாடில்லை. இந்த நிலையில் தற்போது வனத்துறை அதிகாரி ஒருவர் அது ரப்பர் பாம்பு தான் என உறுதி செய்துள்ளார்.
இந்த காட்சிகளை தத்ரூபமாக வடிவமைத்ததால் படக்குழுவினருக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.