Eeramana Rojave Serial Actress Request : விஜய் டிவியில் “ஈரமான ரோஜா “ சீரியலில் துணை நடிகையாக வரும் ஷீலா, கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு சமூக வலைதளங்கள் உடன் தன்னுடன் நட்பில் இருந்த சௌந்தரராஜன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவரும் வேறு வேறு ஜாதி என்பதால், சவுந்தரராஜனுக்கு வேறு திருமணம் செய்து வைக்க அவருடைய அம்மா முடிவு எடுத்துள்ளார் என்றும்,
இதனால் எனக்கும் என்னுடைய கணவனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், தற்பொழுது என் கணவன் என்னுடன் இல்லாமல் சொந்த ஊருக்கு சென்றுள்ளதாகவும் ஷீலா மனம் குமுறுகிறார்.
எனவே என்னை என்னுடைய கணவனுடன் சேர்த்து வைக்குமாறும், அவருடைய அம்மாவை கைது செய்ய வேண்டும் என்றும் எடப்பாடி போலீஸ் நிலையத்தில் ஷீலா புகார் தெரிவித்துள்ளார்.
ஜாதி வேறுபாடு என்ற ஒரே காரணத்திற்காக என்னையும் என் கணவரையும் பிடிப்பதற்கு அவருடைய அம்மா சதித்திட்டம் தீட்டி வருவதாகவும் கூறியுள்ளார். எனவே எங்கள் இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று போலீசாரிடம் கதறும் சீரியல் துணை நடிகை ஷீலா.