ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன், நளினி உட்பட 7 பேர் விடுதலை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார்.
Edappadi Palanisamy Reply to Stalin : ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த போது 1991ம் ஆண்டு தமிழகத்தில் சென்னையில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் அவரை கொலை செய்த வழக்கில் பேரறிவாளன், நளினி உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் குற்றவாளிகள் அல்ல என இவர்களை விடுதலை செய்யுமாறு தொடர்ந்து பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்களும் 7 பேர் விடுதலை குறித்து தமிழகத்தில் எந்த நடவடிக்கையும் என கூறி வருகிறார்.
இப்படியான நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை அளித்துள்ளார்.
அந்தப் பதிவில் திமுக ஆட்சியில் தான் 7 பேரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அக்கறை இருந்திருந்தால் அன்றே அவர்கள் நடவடிக்கை எடுத்திருக்கலாம்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்கு குரல் கொடுத்தது மாண்புமிகு அம்மா அவர்களும், தீர்மானம் நிறைவேற்றி மேதகு ஆளுநரிடம் அனுப்பியது அம்மாவின் அரசும் தான் என தெரிவித்துள்ளார்.