Watch Full VIdeo : – இனி என்னை அசைக்கக் கூட முடியாது எதிர்கட்சி தலைவர் அவர்களே – முதல்வர் பழனிசாமி பேச்சு.!!

edappadi palanisami Latest SPeech : தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக அனைத்து கட்சிகளின் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஒவ்வொரு நாளும் 8 முதல் 10 பிரச்சார கூட்டங்களில் பங்கேற்று மக்களை நேரடியாக சந்தித்து அதிமுகவில் சாதனைகளை எடுத்துக்கூறி ஓட்டு சேகரித்து வருகிறார்.

அந்த வகையில் இன்று கூடலூரில் குறிஞ்சிப்பாடி, புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டம் நுழைவதற்கு ஸ்டாலின் தான் காரணம். அதனை வேளாண் பாதுகாப்பு திட்டத்தின் மூலமாக முழுமையாகத் தடுத்தது அதிமுக அரசு தான் என பேசியுள்ளார்.

மேலும் அம்மா ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஆட்சியை கவிழ்ந்து விடும் என கணக்குப் போட்டார்கள். ஆனால் விவசாயி வருவார் என எதிர்பார்க்கவில்லை. அம்மா வழியில் வந்த அதிமுக அரசு இன்று சிறப்பான ஆட்சியை வழங்கி வருகிறது. நான் ஒன்றும் ஊர்ந்தும் செல்லவில்லை தவழ்ந்தும் செல்லவில்லை நடந்து தான் சென்றேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் புவனகிரியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள சிறப்பான திட்டங்கள் குறித்து பேசினார். முதல்வர் பழனிசாமியின் அதிரடியான பேச்சுக்கு மக்கள் கைத்தட்டி உற்சாக வரவேற்பு கொடுத்தனர். மீண்டும் ஒருமுறை அதிமுக வெற்றி பெற்று மக்களுக்கு சேவை செய்ய வழி செய்யுங்கள் என கேட்டுக் கொண்டார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.