திரௌபதியை களங்கப்படுத்திய துரியோதனன் தன் மனைவியின் கற்பைக் காக்க ஒருவரின் காலில் விழுந்து உள்ளார்.
Duryodhana Wife Secrets : மகாபாரத கதையில் முக்கியமான ஒருவர் துரியோதனன். கௌரவர்களான திருதராஷ்டிரரின் மூத்த மகன். இவர் பானுமதியை மணந்து கொண்டார்.
பானுமதி தன் கணவனே கண் கண்ட தெய்வம் என வாழ்ந்த பத்தினி. ஆனால் துரியோதனன் தன் மனைவியின் பாதத்தை புரிந்து கொள்ளாமல் பாண்டவர்களை அழிப்பதே குறிக்கோள் என இருந்தவர்.
தன் கணவனின் அன்பு கிடைக்காமல் ஏங்கிய பானுமதி கடவுள்களை வணங்கினாள், தியானம் இருந்தாள். அவளுடைய தியானம் பலிக்கும் வேளையில் முனிவர் ஒருவர் வேர் ஒன்றைக் கொடுத்து இதை பாலில் காய்ச்சி துரியோதனனுக்கு கொடு என்றார்.
அதன்படியே பவுர்ணமி அன்று பானுமதி முனிவர் சொன்ன படியே பாலில் இந்த வேரை இட்டு காய்ச்சி தன் கணவர் துரியோதனனுக்காக காத்து கொண்டு இருந்தார்.
இரவின் இரண்டாம் யாமத்தில் குடிபோதையில் வந்தார் துரியோதனன். பானுமதி பாலைக் கொடுக்க அந்தப் பாலை தன்னுடைய இடது கையால் தட்டி விட்டார்.
பால் அனைத்தும் கீழே கொட்டியது. அப்போது அந்த வழியாகச் சென்றுகொண்டிருந்த தக்ஷன் என்ற பாம்பு அந்தப் பாலைக் குடித்தது.
அந்தப் பாலில் கணவனை வசியம் செய்ய வேர் ஒன்று போடப்பட்டு இருந்தால் இந்த பாலை குடித்த தக்ஷன் பானுமதி மீது காதல் கொண்டான்.
அவன் இச்சைக்கு இணங்குமாறு கேட்டான். இதனால் கணவனே தெய்வம் என இருக்கும் பானுமதி துடிதுடித்துப் போனாள். அப்போது தான் துரியோதனனுக்கு பானுமதியின் கற்பு நெறியும் அவள் பாசமும் புரிந்தது.
இதனால் தன் மனைவியின் கற்பை காக்க தட்சன் காலில் விழுந்து கெஞ்சினான். தக்ஷனும் துரியோதனின் வேண்டுகோளை ஏற்று கொண்டார்.
ஆனால் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்று நான் அரண்மனையின் வெளியே உள்ள புற்றின் அருகே வருவேன். எனக்கு பானுமதியும் நீயும் பாலூற்றி பக்தியுடன் வணங்க வேண்டும் என உத்தரவிட்டான்.
அன்று முதல் பானுமதியும் துரியோதனனும் தட்சனுக்கு பால் வைத்து பக்தியுடன் வணங்கி வந்துள்ளனர்.