மாவட்ட செயலாளர் கொடுத்த தொல்லை காரணமாக திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா என்பவர் தற்கொலைக்கு முயன்றதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
DMK District Secretary Vs MLA : தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளா் சிவ பத்மநாதன். இவர் திமுக தலைவர் ஸ்டாலின் தரப்பை சேர்ந்தவர் என பேசப்படுகிறது.
எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா தூத்துக்குடி எம்பி கனிமொழியின் ஆதரவாளர் என கூறப்படுகிறது.
ஒரு கூட்டத்தில் சிவ பத்மனாபன் கோஷ்டியைச் சோ்ந்த சிவன் பாண்டியவன் என்பவா் கண்டபடி ஏசியதாலும் தாக்கியதாலும் அவமானப்பட்ட எம்எல்ஏ பூங்கோதை தற்கொலை முயற்சி எடுத்திருக்கிறாரா என்ற ஓர் கேள்வி அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது!
கூட்டத்தில் கலத்துகொள்ள வந்த பெண் MLAக்கு உட்கார நாற்காலி கொடுக்கப்படாமல் அவரை வெளியே போகச் சொல்லிய மாவட்டச் செயலாளரின் அடியாட்கள் கூச்சலிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்து விட்டுவிடுங்கள் என சொல்லி, பூங்கோதை வெளியே செல்லும் காட்சிகள் நடந்த கதையை கூறுகின்றன.
இருதரப்பிற்கும் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல் சண்டைகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
திமுகவில் எம்பி கனிமொழி ஓரங்கட்டப்படுவதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில் இந்த சண்டை காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.