DMK Break Soon Because Of Udhayanidhi Stalin – Ku.Ka.Selvam Opens Up
உதயநிதியால் திமுக இரண்டாகும்.. தாவத் தயாராகும் துரைமுருகன்? கு.க செல்வம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
உதயநிதி செயல்பாடுகளால் திமுக இரண்டாக பிரியும் எனவும் திமுகவின் முக்கிய புள்ளியான துரைமுருகன் இரு மன நிலையில் இருப்பதாகவும் கு.க செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு ஆட்சி செய்து வருகிறது. எதிர்கட்சியான திமுக எப்படியாவது அடுத்த முறை ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என தீவிரமாக அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளது.
கருணாநிதியின் மறைவிற்கு பிறகு திமுகவின் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார். இதனால் இளைஞர் அணி செயலாளராக இருந்த உதயநிதி அந்த அமைப்பின் தலைவராக உயர்ந்தார்.
தற்போது இளைஞரணி தலைவராக இருந்து வரும் உதயநிதி தன்னுடைய எதிர்கால அரசியலை கருத்தில் கொண்டு திமுகவின் முக்கிய விஷயங்களில் தலையிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இளைஞர்களுக்கு தான் சீட்டு கொடுக்க வேண்டுமென உதயநிதி தரப்பு கூற அதற்கும் ஸ்டாலின் மறுப்பு தெரிவிக்காமல் தலையாட்டி விட்டார். இதனால் திமுகவில் உள்ள சீனியர்கள் செம கடுப்பில் உள்ளனர்.
உதயநிதியின் செயல்பாடுகளால் பாதிக்கப்பட்ட கு.க செல்வம் என்பவர் சமீபத்தில் தான் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். இதனால் திமுக தலைவர் ஸ்டாலின் அவரை கட்சியில் இருந்து நீக்கினார்.
இந்த நிலையில் தற்போது கு.க செல்வம் இளைஞரணி தலைவர் உதயநிதி செயல்பாடுகளால் திமுக இரண்டாக உடையும். துரை முருகன் போன்ற முக்கிய புள்ளிகளே இரு மனநிலையில் உள்ளனர்.
என்னைப் போன்று பலர் திமுகவில் இரந்து கூடிய விரைவில் வெளியேறுவார்கள் என கூறியுள்ளார். இதனால் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதே நிலை தொடர்ந்தால் நிச்சயம் 2021 சட்டமன்ற தேர்தலிலும் திமுக வெற்றி பெறுவது என்பது கேள்விக்குறி தான் என புலம்ப தொடங்கியுள்ளனர்.