Director Shankar About Arrest Warrent

பிடிவாரண்டு குறித்து பரவிய தகவலால் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Director Shankar About Arrest Warrent : தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் சங்கர். இவரது இயக்கத்தில் தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இயக்குனர் ஷங்கருக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதாக தகவல் பரவியது.

எந்திரன் கதை திருட்டு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக கூறியும் கடந்த பத்து வருடங்களாக சங்கர் ஆஜராகாததால் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளதாக அந்த தகவலில் கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது ஷங்கர் பிடிவாரண்ட் குறித்த தகவல் முற்றிலும் பொய்யான தகவல். நீதிமன்றம் அப்படி எந்தவித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Attachments area