இயக்குனர் பாலாவின் அடுத்த படத்தில் மூன்று முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Director Bala Upcoming Movie : தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் பாலா. இவரது இயக்கத்தில் இறுதியாக வெளியான வர்மா திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. மேலும் பாலாவின் இயக்கத்தில் வெளியான கடந்த சில திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் மீண்டும் ஒரு மெகா ஹிட் படத்தை கொடுத்த தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குநர் பாலா.
இவர் அடுத்ததாக multi-starrer படம் ஒன்றை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிப்பதற்காக மூன்று முன்னணி நடிகர்களுக்கு அழைப்பு கொடுத்துள்ளாராம். அதாவது விஷால் ஆர்யா மற்றும் அதர்வா தான் அந்த மூன்று நடிகர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இந்தத் திரைப்படம் பிதாமகன், இந்த படங்களைப் போல சுவாரஸ்யமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.