Dial 1100 toll-free helpline to TN Govt

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் 1100 திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Dial 1100 toll-free helpline to TN Govt : தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் போது, 1100 சேவை எண் திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அரசின் உதவியைப் பெறுவதற்காக, 1100 என்ற சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

நடவடிக்கை :

தற்போது, இந்த சேவை மூலம் அனைத்து துறைகளும் முதலமைச்சரின் அலுவலக உதவி மையம் மூலமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

இதனால், முதல்வர் அல்லது ஆட்சியரை இனி நேரில் சந்தித்து மனு கொடுக்க வேண்டிய நிலை ஏற்படாது, 1100 உதவி மைய எண் தொடர்பு வாயிலாகவே, துறை சார்பில் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மக்களிடம் வரவேற்பு :

முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில், நடைமுறைப்பட்டுள்ள இந்த 1100 உதவி மையம், தற்போது தமிழகமெங்கும் மக்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும், இத்தகு உதவி மையத்தால் தங்களது பணிச்சுமை எளிதாகி விடுவதாகவும் தொடர்பு கொண்டு பயன்பெற்றோர் தெரிவித்தனர்.