Dharmapuri Bus Fire : கொடைகேனல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில், அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் முதல்வராக இருந்த ஜெயலலிதாவிற்கு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2000 ஆம் ஆண்டில் ஓராண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது”.
இந்த தீர்ப்புக்கு எதிராக அதிமுகவினர், போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தர்மபுரி அருகே கோவை அரசு வேளாண்மை கல்லூரி மாணவர்கள் பேருந்தை அதிமுகவினர் போராட்டத்தில் எரித்தனர். அதில், கோகிலவாணி, காயத்ரி மற்றும் ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் தீயில் கருகி உயிரிழந்தனர்.
இதன் காரணமாக, பேருந்தில் தீ வைத்ததற்காக அதிமுகவை சேர்ந்த 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் ‘ நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகிய 3 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது’.
பின்பு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது, பின்னர் தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டை ஒட்டி அந்த 3 பேரை விடுதலை செய்யுமாறு, தமிழக அமைச்சரவை தீர்மானம் போட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.
இந்நிலையில், ஆளுநர் அனுமதி கிடைத்ததை அடுத்து, இன்று 3 பேரும் வேலூர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் கடந்த 18 ஆண்டுகளாக சிறையில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.