தமிழகத்தில் இன்று கொரானாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை என்ன? என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க.
COVOD19 Update 14.08.20 : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
தமிழகத்தில் இன்று 5,890 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,26,245 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 1,187 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது.
கொரோனா தடுப்பு ஊசியை வெளியிட்ட முதல் நாடு ரஷ்யா!
இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,67,015 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 5,556 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.
தற்போது தமிழகத்தில் 53,716 பேர் மட்டுமே கொரானா சிகிச்சை பெற்று வருபவர்கள் எனவும் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று 117 பேர் உயிரிழந்துள்ளதால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,514 ஆக உயர்வு.
இதுவரை தமிழகம் முழுவதும் 34 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.