தமிழகத்தில் நான்கு நாளாக கொரானா பாதிப்பு குறைந்து இருந்ததை தொடர்ந்து இன்று மீண்டும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அது குறித்த முழு விவரத்தை பார்க்கலாம்.
COVID 19 Update 09.07.20 : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
தமிழகத்தில் 4,231 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,26,581 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 1,216 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் 145 பேர் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1, 700- ஐ தாண்டியுள்ளது.
இந்திய அளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கி வருகிறது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது.