Court Verdict on Chithra Suicide case

சித்ராவின் பெயரை களங்கப்படுத்தும் வகையில் கணவர் செயல்படுவதாக கூறி அவரது ஜாமீன் விவகாரத்தில் நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளது.

Court Verdict on Chithra Suicide case : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக சீரியல் நடிகையாகவும் வலம் வந்தவர் சித்ரா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலமாக ரசிகர்களுக்கு மிகவும் பிரபலமானார்.

இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் கணவர் ஹேமந்த்துடன் ஏற்பட்ட தகராறில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து போலீசார் ஹேமநாத் என்பவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஹேமந்த் தரப்பு தொடர்ந்து சித்ரா மீது வெவ்வேறு விதமான குற்றச்சாட்டுகளை சாட்டி வருகின்றது.

மேலும் ஹேமந்த்திற்கு ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. வீடியோ கான்பரன்ஸ் மூலமாக இந்த மனு விசாரணைக்கு வந்தபோது அரசு வழக்கறிஞர் இன்னும் கோட்டாட்சியர் விசாரணை முடியவில்லை. சித்ராவின் பெயரை களங்கப்படுத்தும் வகையில் அவரது கணவர் செயல்பட்டு வருகிறார்.

இந்த நாள் அவருக்கு ஜாமீன் அளிக்கக் கூடாது என வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ஹேம்நாத் மீதான ஜாமின் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.