சீனாவில் பல உயிர் பலி வாங்கி வரும் கொரனா வைரஸ் இந்தியாவையும் தாக்கி இருப்பது அதிர்ச்சியை ஏறுபடுத்தியுள்ளது.
சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் கொரனா வைரஸ் வேகமாக பரவி பல உயிர்களை பலி வாங்கி வருகிறது. பாம்பு உள்ளிட்ட உயிரினங்களிடம் இருந்து பரவி வரும் இந்த வைரஸால் உலக நாடுகள் அச்சத்தில் உறைந்து போயுள்ளன.
இந்நிலையில் தற்போது சீனாவில் இருந்து கேரளா வந்த கல்லூரி மாணவருக்கு கொரனா வைரஸ் தாக்கி இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால் இந்திய மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.
தற்போது அந்த மாணவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் சீனாவில் உள்ள வுகாண் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.