Complaint on Trisha

திரிஷாவின் மீது நடிகர் சங்கத்தில் பரபரப்பு புகார் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

Complaint on Trisha : தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் பிஸியான நடிகையாக நடித்து வருகிறார். தமிழில் அஜித், விஜய், சூர்யா, ரஜினி, கமல் என அத்தனை திரையுலக பிரபலங்கள் உடன் இணைந்து நடித்துள்ளார்.

மேலும் தற்போது கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் படங்களிலும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்ததாக பரமபதம் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

ரிலீஸுக்கு தயார் நிலையில் உள்ள இந்த படத்தின் டிரைலரை வெளியிட படக்குழு முடிவு செய்து ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை நடத்த உள்ளது. இந்த விழாவில் படத்தின் பிரமோஷனுக்காக த்ரிஷாவை படக்குழு அறிவித்துள்ளது. ஆனால் அவர் வரமுடியாது என கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் நயன்தாரா இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறாரா? அவருக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

த்ரிஷாவின் இப்படியான பதிலால் படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான திரு நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து த்ரிஷாவிடம் நடிகர் சங்கம் விசாரணை நடத்தியுள்ளது. உங்கள் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்றால் நடிப்பதற்கு தடை விதிக்கப்படும் என கூறி உள்ளது.

இதனால் திரிஷா என்ன முடிவு எடுக்கப் போகிறார்? என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்ற அதிர்ச்சியில் அவரது ரசிகர்கள் உறைந்து போயுள்ளனர்.