YouTube video

CM Palanisamy Speech in Christmas Celebration : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆளுங்கட்சியின் பதவிக் காலம் இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வர உள்ளது. அதாவது சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது.

இந்த நிலையில் கூட்டம் ஒன்றில் பேசிய போது கூட்டணி வேறு கொள்கை வேறு என்றும், சிறுபான்மையினர் அச்சப்பட தேவையில்ல என்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க சார்பில் கிருஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சி சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பி.எஸ், அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கிருத்துவர்களின் புனித தலமான ஜெருசலேம் செல்வதற்கு புனித பயணத்திற்கான நிதி ரூ 20,000ல் இருந்து 37, 000 ரூபாயாக உயர்த்தப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், கூட்டணி வேறு, கொள்கை வேறு என்று கூறிய அவர், அ.தி.மு.க என்றும் தனது கொள்கையின் படியே நிற்கும் என்று தெரிவித்தார். சிறுபான்மையினர் அச்சப்பட தேவையில்லை என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.