CM Palanisamy Conversation with Rajinikanth

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

CM Palanisamy Conversation with Rajinikanth : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிவரும் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நால்வருக்கு கொரானா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் படப்பிடிப்புகள் உடனடியாக நிறுத்தப்பட்டன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வைரஸ் தொற்று பாதிப்பு இல்லை என பரிசோதனையில் தெரியவந்தது. இருப்பினும் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று ரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார். இன்று அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது.

இப்படியான நிலையில் தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தொலைபேசி வாயிலாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார். மேலும் ரஜினிகாந்த் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப இறைவனை பிரார்த்தித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.