ரூபாய் 20 கோடி செலவில் பிரம்மாண்ட சந்தை அமைக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
CM EPS Speech in Tenkasi : தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வெகு விரைவில் நடைபெற இருப்பதால் அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் விவசாயிகள் பயிரிடும் காய்கறிகளுக்கு நியாமான விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக பத்து மாவட்ட தலை நகரங்களில் 20 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட சந்தைகள் கட்டப்பட்டு வருவதாக முதல்வர் பழனிசாமி தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அது போன்று ஒரு பெரிய சந்தையை நெல்லையிலும் கட்ட அரசு பரிசீலிக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.