CM EPS Latest Press Meet in Coimbatore

கூட்டணி அமைச்சரவைக்கு வாய்ப்பே இல்லை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

CM EPS Latest Press Meet in Coimbatore : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு சிறப்பான ஆட்சியை வழங்கி வருகிறது. இன்னும் ஐந்தே மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் குதித்துள்ளன. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் மக்களை நேராக களத்தில் இறங்கி சந்தித்து பேசி வருகிறார்.

அந்த வகையில் இன்று கோயம்புத்தூர் பிரச்சார நிகழ்ச்சிக்காக சென்ற போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது தமிழகத்தில் கூட்டணி அமைச்சரவைக்கு வாய்ப்பே இல்லை. அதனை ஏற்பதில் அதிமுகவுக்கு உடன்பாடு இல்லை, இதுவே எங்கள் நிலைப்பாடு என தெரிவித்துள்ளார்.

மேலும் திமுக துணை தலைவர் துரைமுருகன் பணப்பட்டுவாடா செய்து சர்ச்சையில் சிக்கியவர். அவர் பணப்பட்டுவாடா பற்றி பேசலாமா?? நாடாளுமன்றத் தேர்தலின் போது அவர்கள் வீட்டில் ரைடு நடத்தப்பட்டு பணம் பறிமுதல் செய்தனர்.

அதிமுகவை குறைசொல்லும் துரைமுருகன் தன்னுடைய சொத்து மதிப்பை வெளியிட தயாரா?? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் திமுக தலைவர் ஆவதற்கு ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது?? வாரிசுகளை மட்டும் தான் தலைவராக முன்னிலைப்படுத்துவார்கள்.

ஸ்டாலின் அதிமுக ஆட்சிக்காலத்தில் சென்னையில் ஒரு பாலம் கூட கட்டவில்லை என அபாண்டமாக பொய் கூறுகிறார். மொத்தம் 15 இடங்களில் பாலம் கட்டும் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் கூட பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளார்.

அதேபோல் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் அவருடைய கட்சி குறித்த கேள்விக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கமல்ஹாசன் திரைப்படங்களில் ஹீரோவாக இருக்கலாம். அரசியலில் அவர் ஜீரோ. தமிழகத்தைப் பற்றியும் தமிழக அரசியலைப் பற்றியும் கமல்ஹாசனுக்கு ஒன்றும் தெரியாது என தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் செல்லும் இடமெல்லாம் மக்கள் அவருக்கு மலர் தூவி ராஜமரியாதையுடன் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

அது குறித்த வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகின்றன.