CM Edapadi Palanisamy Starts Election Works

கோவிலில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்.

CM Edapadi Palanisamy Starts Election Works : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியின் பதவிக்காலம் முடிந்து 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

எதிர்க்கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கி விட்ட நிலையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பிரச்சாரத்தை தொடங்கி வைத்துள்ளார்.

தன்னுடைய சொந்தத் தொகுதியான எடப்பாடிக்கு உட்பட்ட நங்கநள்ளி அருகே உள்ள பெரிய சோரகை சென்றாய பெருமாள் கோவிலுக்கு இன்று காலை 11 மணிக்கு சென்றார்.

சுவாமி தரிசனம் செய்தபிறகு திறந்த வேனில் பிரச்சாரத்தை தொடங்கினார். எப்போதும் முதல்வர் பழனிசாமி இந்த கோவிலில் தரிசனம் செய்த பிறகே பிரச்சாரத்தை தொடங்குவது வழக்கம். பிரச்சாரத்தின் போது இந்த முதல்வர் பதவி எனக்கு கடவுள் அருளால் கிடைத்தது என பேசினார்.

தேர்தல் பிரச்சாரங்களுக்கு இடையே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆங்காங்கே 5 அம்மா மினி கிளினிக்குகளை தொடங்கி வைத்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியது அதிமுக தொண்டர்கள் இடையே மகிழ்ச்சியையும் கொண்டாட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்திற்காக அவர் சென்ற இடங்களில் எல்லாம் மக்களும் அதிமுக தொண்டர்களும் அணிதிரண்டு அமோக வரவேற்பு அளித்தனர்.

வழியெங்கிலும் பேனர், தோரணம், போன்றவர்களை அமைத்து தொண்டர்கள் முதல்வருக்கே பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர்.

போலீஸ் ஐ.ஜி பெரியய்யா, டி.ஐ.ஜி. பிரதீப் குமார், போலீஸ் சூப்பிரண்டு தீபாகனிக்கர் ஆகியோர் தலைமையில் முதல்வருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது.