CM edapadi palanisamy speech in Vellore

டிடிவி தினகரனை நம்பி போனால் நடுரோட்டில்தான் நிற்கவேண்டும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

CM edapadi palanisamy speech in Vellore : ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சிறந்த ஆட்சியை வழங்கி மக்கள் மத்தியில் நீங்காத இடம் பெற்றுள்ளார்.

முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரின் தலைமையில் கட்சியும் ஆட்சியும் நல்ல முன்னேற்றத்தை கண்டு வருகிறது.

இந்த நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் கைதாகி சிறையில் தண்டனை பெற்ற சசிகலாவால் அதிமுகவில் பிரச்சனை ஏற்படும் என கூறப்பட்டு வருகிறது.

மேலும் கட்சியில் இருந்து கொண்டு சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருபவர்களை முதல்வரும் துணை முதல்வரும் சேர்ந்து களை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் முதல்வர் பழனிசாமி வேலூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் 10 ஆண்டுகள் உறுப்பினராக இல்லாத டிடிவி தினகரன் அதிமுகவை கைப்பற்ற முயற்சித்து வருகிறார்.

டிடிவி தினகரனை நம்பி போனால் நடுத்தெருவில் தான் நிற்கவேண்டும்.

அவரை நம்பி போன எங்கள் 18 MLAக்களுக்கு பதவி போனது தான் மிச்சம் என தெரிவித்துள்ளார்.

மேலும் திமுக ஜெயிப்பதற்கு சிலர் மறைமுகமாக உதவி செய்கிறார்கள். அதையெல்லாம் முறியடித்து அதிமுக ஆட்சிக் கட்டிலில் மீண்டும் அமரும் என தெரிவித்தார்.