Chithra Parents Complaint on Hemnath

சித்ரா தற்கொலை செய்துகொண்ட அறையில் சிக்கிய சில பொருட்களால் ஹேம்நாத் மீண்டும் சிக்கியுள்ளார்.

Chithra Parents Complaint on Hemnath : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பயணத்தை தொடங்கி பிரபல சீரியல் நடிகை யாக வலம் வரத் தொடங்கியதால் சித்ரா. இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லை என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஏமாத்தி என்பவரை காதலித்து ரகசிய திருமணம் செய்து கொண்டார்.

திருமணமான சில மாதங்களிலேயே தன்னுடைய கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சென்னையில் உள்ள பைவ் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து ஹேம்நாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இப்படியான நிலையில் சித்ரா தங்கியிருந்த அறையில் உள்ள பொருட்களை அவரது பெற்றோர்கள் வைத்துக் கொள்ளலாம் என போலீசார் அனுமதித்தனர்.

சித்ரா தங்கியிருந்த அறைக்குள் சென்ற அவரது பெற்றோர் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் கட்டிலில் கட்டியணைத்து கதறி அழுதனர். மேலும் அறையில் மது பாட்டில்கள் மற்றும் சிகரெட் பாக்கெட்கள் இருந்ததைக் கண்ட சித்ராவின் பெற்றோர் இதை எல்லாம் ஹேமநாத் தான் கொண்டு வந்திருப்பான். இதை எப்படி அனுமதித்தீர்கள்? என ஹோட்டல் நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அறையிலிருந்த பேனையும் கட்டிலையும் கட்டியணைத்து அவருடைய பெற்றோர்கள் கதறிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பலரையும் கண்கலங்க வைத்துள்ளது