Chithra Mother Shocking Interview

சித்ரா தற்கொலை பண்ணிக்கல அடித்து கொன்று விட்டான் என அவருடைய தாயார் கண்ணீருடன் பேட்டி அளித்துள்ளார்.

Chithra Mother Shocking Interview : தமிழ் சின்னத்திரையில் சீரியல் நடிகையாக வலம் வருபவர் சித்ரா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் முல்லை வேடத்தில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று ஸ்டார்ட் மியூசிக் முடித்து விட்டு ஹோட்டலுக்கு சென்ற சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இந்த நேரத்தில் அவருடைய கணவர் ஹேமந்த் அவர்களும் உடனிருந்தார்.

தகவலறிந்த போலீசார் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது சித்ராவின் தாயார் அவன் என் பொண்ண மோசம் பண்ணிட்டான், அடித்துக் கொன்று விட்டான் என மார்பில் அடித்துக்கொண்டு கண்ணீருடன் பேட்டியளித்துள்ளார்.

அவனைச் சும்மா விடக்கூடாது அவனை கொல்லணும் எனவும் ஆவேசமாக பேசியுள்ளார். உடன் இருந்தவர்கள் இதையெல்லாம் பேச வேண்டாம் என தடுத்தும் சித்ராவின் தாயார் தன்னுடைய ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார்.

இதனால் சித்ராவின் தற்கொலைக்கு வேறு சில மர்மங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. போலீசார் இந்த வழக்கில் தீவிரமான விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் சித்ராவின் கணவன் உட்பட பலரிடம் இரண்டாவது நாளாக இன்றும் விசாரணை தொடர்ந்து வருகிறது.

ஆனால் பிரேத பரிசோதனை முடிவில் சித்ரா தற்கொலை தான் செய்து கொண்டார். அவரது கன்னத்தில் இருந்த காயம் நகக்கீறல் என தெவித்துள்ளனர்.