Chithra Father in Law Interview

நடிகை சித்ராவின் மரணம் குறித்துஅவருடைய மாமனார் அளித்துள்ள பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chithra Father in Law Interview : தமிழ் சின்னத்திரையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து மிகவும் பிரபலமானவர் சித்ரா. பல சேனல்களில் தொகுப்பாளினியாக பணியாற்றிய இவர் இந்த சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பெற்றார்.

இவருக்கும் ஹேம்நாத் என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்னர் நிச்சயதார்த்தமும் பதிவுத் திருமணமும் நடந்து முடிந்தது. இப்படியான நிலையில் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் மன உளைச்சலுக்கு ஆளான சித்ரா ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவரது தற்கொலையை தொடர்ந்து கணவரிடம் தொடர்ந்து 6 நாட்களாக போலீசார் விசாரணை செய்து வந்தனர்.

இந்த நிலையில் சித்ராவை தற்கொலைக்கு தூண்டிய காரணத்துக்காக அவரது கணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து தற்போது சித்ராவின் மாமனார் அளித்த பேட்டி ஒன்றில் சித்ராவை நாங்கள் இதுவரை பணமோ, பொருளோ கேட்டு தொந்தரவு செய்தது இல்லை. அவரிடம் வரதட்சணைக் கூட கேட்டதில்லை என கூறியுள்ளார்.

என்னுடைய மகனை போலீசார் கைது செய்தது சரியில்லை. யாரைக் காப்பாற்ற என் மகனை கைது செய்தார்கள் என தெரியவில்லை என்று பேசியுள்ளார்.

சித்ராவின் மரணத்தில் ஒரு எம்எல்ஏ மற்றும் அமைச்சருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் அவருடைய மாமனார் இவ்வாறு பேட்டியளித்துள்ளார். அவருடைய இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.