Chief Minister Edappadi Palanisamy Mother Passes Away
Edappadi Palanisamy Mother Death : தமிழகத்தின் தற்போதைய முதல்வராக செயல்பட்டு வருபவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நம்பிக்கைக்குரிய ஒருவராக வலம் வந்த இவர் தற்போது தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்கி வருகிறார்.
இந்த நிலையில் 93 வயதான இவருடைய தாயார் விவசாயி அவர்கள் வயது முதிர்வு மற்றும் தண்டுவட பிரச்சனை காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
இந்த தகவலை அறிந்த தமிழக முதல்வர் பழனிசாமி நள்ளிரவே சேலம் புறப்பட்டார். தன்னை ஈன்றெடுத்த தாயார் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி உள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தன் தாயார் மீது அதிக பற்று கொண்டவர். எப்போது சேலத்திற்கு சென்றாலும் தன்னுடைய தாயாரை பார்க்காமல் திரும்ப மாட்டார்.
பாசத்திற்குரிய அம்மா உயிரிழந்திருப்பது முதல்வர் பழனிசாமி அவர்களுக்கும் அவருடைய குடும்பத்திற்கும் பேரிழப்பாக அமைந்துள்ளது.
மக்கள் அதிமுக தொண்டர்கள் என பலரும் முதல்வர் பழனிசாமி அவர்களின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.