Chennai Police File Case on Meera Mitun
Chennai Police File Case on Meera Mitun

ஜோ மைக்கேல் கொடுத்த வழக்கு காரணமாக மீராமிதுன் மீது சென்னை போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Chennai Police File Case on Meera Mitun : தமிழ் சினிமாவின் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். இவர் தன்னுடைய விளம்பரத்திற்காக கடந்த சில மாதங்களாக தொடர்ந்து விஜய், சூர்யா மற்றும் அவர்களின் குடும்பத்தாரைப் பற்றி தரக்குறைவாக பேசி வருகிறார்.

மேலும் இவருக்கும் மாடலிங் துறையை சேர்ந்த ஜோ மைக்கேல் என்பவருக்கும் இடையே தொடர்ந்து மோதல்கள் நிலவி வருகிறது. ஜோ மைக்கேல் அவர்கள் மீரா மிதுன் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

மீரா மிதுன் திருமண ஆதாரத்தை வெளியிட்ட ஜோ மைக்கேல் – மீராவை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!

இதனையடுத்து கே எம் பி நகர் போலீசார் மீரா மீது பொது இடத்தில் பிறருக்கு தொல்லை தரும் படி பேசுதல், கொலை மிரட்டல், தகவல் தொழில் நுட்ப சட்ட பிரிவு உட்பட ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதேபோல் கேரளாவில் உள்ள இடுக்கி காவல் நிலைய போலீசார் அவர்களும் மீரா மிதுன் மீது 3 பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மீரா மிதுன் விரைவில் கைதாகலாம் என கூறப்பட்டு வருகிறது.