பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக சென்னை தேர்வாகி இருப்பதாக ஐஐடி மும்பை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Chennai is Safe City for Womens : இந்தியாவில் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறி வருகின்றன. இதனால் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என தொடர்ந்து பல தரப்பிலிருந்து குரல்கள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில் மும்பை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளனர். அந்த ஆய்வில் பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் அனைத்து தேவைகளையும் புத்தி செய்யும் இடங்கள் எது என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டன.
இந்த ஆய்வின் முடிவில் சென்னை பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக தேர்வாகியுள்ளது. இங்கு பெண்கள் பாலின விகிதங்கள் இல்லாமல் மிகுந்த பாதுகாப்போடு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
புனே பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பு குறைந்த மாநிலமாக கண்டறியப்பட்டுள்ளது.
பெண்களுக்கு பாதுகாப்பு நிறைந்த இடமாக தமிழகத்தைச் சேர்ந்த சென்னை முதலிடத்தை பிடித்திருப்பது தமிழக மக்களுக்கு கிடைத்த பெருமையாகவே பார்க்கப்படுகிறது.
பெண்கள் சுதந்திரமாக நடமாடவும், அவர்களுக்கான உரிமையை மாநில அரசு எந்தவித தயக்கமும் இல்லாமல் வழங்கி வருவதே இதற்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.
பெண்கள் பாதுகாப்பிற்காக தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.