சென்னையில் 300 கொரானா நோயாளிகள் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Chennai Corona Patients Missing : சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் சென்னை பெரிய அளவில் பாதிப்பை சந்தித்து வருகிறது. இங்கு மட்டும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் கொரானா உறுதி செய்யப்பட்ட 300 பேர் காணாமல் போயுள்ளனர். இவர்கள் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டவர்கள்.
முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை தவறாக கொடுத்ததால் இவர்கள் யார் என்பதை கண்டறிவதில் சிக்கல் நீடிக்கிறது.
மேலும் இவர்களை தேடும் பணியில் மாநகராட்சி முழுவீச்சுடன் இறங்கியுள்ளது. இந்த சம்பவம் சென்னை மக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.