Chembarambakkam Lake Water Update

செம்பரம்பாக்கம் 12 மணிக்கு ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Chembarambakkam Lake Water Update : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்துள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் இன்று சென்னை மகாபலிபுரம் மற்றும் புதுச்சேரி இடையே கரையைக் கடக்க உள்ளது.

இதனால் தமிழகம் முழுவதும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர்.

சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி தொடர் மழையால் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. ஒரு அடி மட்டுமே பாக்கி உள்ள நிலையில் இன்று மதியம் 12 மணியளவில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சிறுகளத்தூர் காவலூர் குன்றத்தூர் திருமுடிவாக்கம் திருநீர்மலை உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.