Central Government Plan on Airports : நாட்டில் உள்ள மேலும் சில விமான நிலையங்களை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இணையவழி கருத்தரங்கில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறியதாவது :
மேலும் சில விமான நிலையங்களை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கான பரிந்துரையை மத்திய அரசு அமைச்சரவை குழுவிடம் அமைச்சகம் சமர்ப்பித்துள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளுக்குள் 100 புதிய விமான நிலையங்களை கட்டவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை மட்டும் உள்நாட்டு விமானங்களில் 94,000 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்,
நடப்பு ஆண்டு இறுதிக்குள் நாட்டின் விமான போக்குவரத்து இயல்பு நிலை திரும்பும் என்றும் சர்வதேச விமான சேவைகளை வழங்குவதற்காக நாடுகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்று அவர் கூறினார்.