teacher

காணமல் போனதாக போலீசாரால் தேடப்பட்டுந்த பள்ளி ஆசிரியை பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராம்கார் எனும் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் அங்கிதா(25). இவரின் கணவர் வேத பிரகாஷ் ஒரு தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

அங்கிதா கடந்த 7ம் தேதி திடீரென காணமல் போனார். கடைசியாக அவரின் மாமியாரை பர்ககானா ரயில் நிலையத்தில் சந்தித்து பேசியுள்ளார். 3 மணியளவில் தனது கணவரிடம் செல்போனில் பேசியுள்ளார். 4.30 மணியளவில் தனது மாமனாரிடம் செல்போனில் பேசியுள்ளார். அதன்பின் அவரது கணவர் பலமுறை தொடர்பு கொண்டும் அவர் செல்போனை எடுக்கவில்லை.

பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. எனவே, அவரின் கணவர் அவரை காணவில்லை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அங்கிதாவை தேடி வந்த நிலையில் கடந்த 9ம் தேதி ராஞ்சியிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு குளத்தில் அங்கிதாவின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வீட்டில் ஒரு தற்கொலை கடிதம் எழுதி வைத்திருப்பதால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என நம்பப்படுகிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.