Bigil KP Selvah

பிகில் சிறப்பு காட்சிகளுக்கு அரசு தடை விதித்திருக்கும் நிலையில், சில திரையரங்குகளில் அதிகாலை காட்சி திரையிடப்பட இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தீபாவளிக்கு பிகில் மற்றும் கைதி என இரு திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. இதில், அதிகாலை சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுக்க முடியாது. அதை மீறி திரையிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஏற்கனவே கூறிவிட்டார்.

மேலும், ‘சிறப்பு காட்சிக்கு முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டுகளை ரத்து செய்து அதற்கான பணத்தை திருப்பு கொடுக்க வேண்டும்’ என திரையரங்குகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இது சிறப்பு காட்சிகளுக்கு டிக்கெட் எடுத்த விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

bigil

பிகில் இசை வெளியீட்டு விழாவில் ஆளும் கட்சியை விமர்சிக்கும் வகையில் விஜய் பேசியதே இதற்கு பின்னணி என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருநெல்வேலியில் உள்ள சுரண்டை கவிதா திரையரங்கில் நாளை அதிகாலை 4.30 மணிக்கு காட்சி திரையிடப்பட இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இது தொடர்பான போஸ்டரை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.