யாருமே எதிர்பார்க்காத ஒருவர் டிக்கெட்டு பினாலே டாஸ்கில் வென்று நேரடியாக பைனலுக்கு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
Bigg Boss4 Tickets to Finale Winner : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் நிறைவை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
தற்போது நேரடியாக பைனலுக்கு ஒருவர் செல்வதற்கான டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது.
இந்த டாஸ்கின் அனைவரும் ரியோ ராஜ் என்று நேரடியாக பைனலுக்கு செல்வார் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தற்போது நமக்கு கிடைத்த தகவல் படி யாரும் எதிர்பார்க்காத ஒருவர் இந்த டாஸில் வென்று இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
ஆம் பிக் பாஸ் வீட்டில் அமைதியாகவே இருந்து வந்த சோம் சேகர் டிக்கெட்டு பினாலே இன்று நேரடியாக பைனலுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.
சோம் சேகர் பிக் பாஸ் வீட்டில் எதுவுமே செய்யவில்லை என ரசிகர்கள் பலரும் கூறி வந்த நிலையில் அவர் நேரடியாக பைனலுக்கு சென்றிருப்பது அனைவருக்குமே ஒரு அதிர்ச்சி தான்.
பாலா, ஆரி ஆகியோரும் வெறித்தனமான இந்த டாஸ்கில் பங்கேற்று விளையாடினர். ஆனால் அவர்கள் யாருமே இந்த டிக்கெட்டை வெல்லாதது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தையும் கொடுத்துள்ளது.
பிக் பாஸ் 4 சீசன் டைட்டிலை யார் வெல்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
மக்களின் ஆதரவை பெரிய அளவில் பெற்றிருக்கும் ஆரியா? அல்லது பாலாவா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.