Bhagya Raj : சர்கார் கதை திருட்டு கதை என குற்றசாட்டு எழுந்திருப்பது அனைவரும் அறிந்ததே. வருண் ராஜேந்தர் என்பவர் தான் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வழக்கு தொடர்வதற்கு முன்பாக இவர் திரைப்பட எழுத்தாளர் சங்கத்திலும் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து இருவரின் கதையையும் ஒப்பிட்டு பார்த்த சங்கம் ஒரே மாதிரி இருப்பதாக நேற்று அறிக்கை வெளியிட்டு இருந்தது.
இது குறித்து தற்போது திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவரான பாக்யராஜ் பேசியிருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விசியத்தை வெளியில் தெரியாமல் பார்த்து கொள்ள எவ்வளவோ முயற்சி செய்தேன். வருண் ராஜேந்திரனுக்கு கொஞ்சமாவது கிரெடிட் கொடுக்குமாறு கேட்டு கொண்டேன்.
ஆனால் முருகதாஸ் அதெல்லாம் முடியாது இது என்னுடைய கதை என உறுதியாக இருக்கிறார். எதையும் கோர்ட்டில் சந்தித்து கொள்வதாகவும் கூறி விட்டார் என கூறியுள்ளார்.
நீதி மன்றத்தின் இந்த வழக்கு தொடர்பான விசாரணை மீண்டும் வரும் அக்டோபர் 30-ம் தேதி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.