begger
விபத்தில் மரணமடைந்த பிச்சைக்காரரின் வங்கிக் கணக்கில் லட்சக்கணக்கில் பணம் இருந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Beggar having 8.77 lakh fixed deposit in bank account – மும்பை கோவண்டி பகுதியில் வசித்து வந்தவர் புர்ஜூ சந்திர அசாத். இவர் அப்பகுதியில் தினமும் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தார். இவர் சமீபத்தில் ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது எதிர்பாராத விதமாக ரயிலில் மோதி இறந்துவிட்டார். போலீசார் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவர் தங்கியிருந்த வீட்டில் சோதனையும் நடத்தினர்.

சிங்கத்திற்கு ஹாய் சொன்ன பெண்; அடுத்து நடந்தது என்ன? வீடியோ பாருங்க

அப்போது, அவரின் வங்கிக் கணக்கில் ரூ.8 லட்சம் பிக்சட் டெபாசிட் செய்துள்ளது கண்டு ஆச்சர்யம் அடைந்தனர். மேலும் ரூ.1.5 லட்சத்திற்கும் மேல் கையிருப்பாக வீட்டில் வைத்திருந்தார். அதில் பெரும்பாலானவை சில்லறைகளாக இருந்தன.

இரவு பகலாக பிச்சையெடுத்து பணம் சேர்த்து அதை அனுபவிக்க முடியாமல் சந்திர அசாத் மரணமடைந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அவரிடம் இருக்கும் பணம் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.